மார்த்தாண்டம், ஆக. 13 –
மார்த்தாண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இந்து சூடன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை நேசமணி கிறிஸ்தவ கல்லூரி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்ற சுமார் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார். இதை அடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் நடந்த சோதனையில் 50 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. அவரை மார்த்தாண்டம் காவல் நிலையம் கொண்டு விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அவர் மார்த்தாண்டம் செட்டிச்சார்விளை பகுதியில் வசித்து வரும் ரவீந்திரன் மகன் சுபாஷ் கிருஷ்ணன் (27) என்பதும் பெயிண்டர் வேலை செய்வதும் தெரிய வந்தது. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி ஆகும். இதையடுத்து சுபாஷ் கிருஷ்ணனை கைது செய்து அவருக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? என்பது குறித்து போலீசார் கிடிக்கிபிடி விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் சுபாஷ்கிருஷ்ணன் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர்.
இதில் அவரது வீட்டின் மாடியில் பூஞ்செடிகள் வைத்து வருவதும் அதன் நடுவே கஞ்சா செடிகள் பயிரிடுவதும் தெரிய வந்தது. தொடர்ந்து கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் சுபாஷ் கிருஷ்ணனின் செல்போனை கைப்பற்றி இவருக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



