திருவண்ணாமலை, அக். 10 –
செங்கம் வட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இறையூர் உள்வட்டம் வாசுதேவன்பட்டு ஊராட்சியில் மேலப்புஞ்சை அனந்தல்வாசுதேவன்பட்டு உள்ளிட்ட கிராம பொதுமக்களுக்கான மனுநீதிநாள் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார்.
பெ.சு.தி. சரவணன் எம்எல்ஏ மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ராமபிரதீபன் முன்னாள் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்க கோட்டாட்சியர் எஸ்.ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமையொட்டி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 78மனுக்கள் பெறப்பட்டன இதில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டது.
ஏற்கப்பட்ட மனுதாரர்களுக்கு தையல் இயந்திரம், சக்கர நாற்காலி, இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, விபத்து நிவாரண தொகைக்கான காசோலை, பாசன கருவி, தெளிப்பான் இயந்திரம், தார்பாய், உளுந்து, தென்னங்கன்று உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார். முடிவில் செங்கம் தாசில்தார் ராம்பிரபு நன்றி கூறினார்.



