ராமநாதபுரம், ஆக. 5-
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்(09/20) இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் சூரன்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில இணைச்செயலாளர் ஜெயபாரதன், மாநில மகளிர் அணி செயலாளர் செந்தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்டத்திலுள்ள மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.
கூட்டத்தில்,
நமது ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு கட்ட போராட்ட அறிவிப்பு பலகை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டது. அனைத்து ஒன்றியங்களுக்கும் சுவரொட்டிகள் மாவட்ட மையத்தின் சார்பாக விநியோகிக்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் இராமநாதபுரம் ஒன்றிய தலைவராக முனியசாமி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாவட்ட இணை செயலாளராக முனியசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய நிர்வாகிகள் பணி சிறக்க மாவட்ட மையத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இராமநாதபுரம் பத்மநாபன் நன்றி கூறினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் சூரக்கோட்டை பாக்கியராஜ், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் முத்து வழி விட்டான், மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பொருளாளர் சிவசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



