தஞ்சாவூர், ஜூன் 15 –
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை இலக்கிய துறையில் தொடங்கப்பட்டது. துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பாரத ஜோதி, தலைமையில் பதிவாளர் (பொறுப்பு) பன்னீர் செல்வம் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
இதில் இலக்கியத்துறை தலைவர் தேவி, பேராசிரியர் இளையாப்பிள்ளை, தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கர், கல்வியல் மற்றும் மேலாண்மை இயல் துறை தலைவர் சின்னப்பன், பேராசிரியை தனலட்சுமி, மொழிபெயர்ப்பு துறை தலைவரும், மக்கள் தொடர்பு அலுவலருமான முருகன், சேர்க்கை பிரிவு அலுவலர் நிலை பணியாளர்கள் கயல்விழி, அமுதா, மணிகண்டன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



