திருச்சி, ஏப். 22 –
திருச்சி மாவட்டம் மணப்பாறை இந்திரா நகரில் வசிக்கும் சேவியர் ஸ்டேன்லி (62) மற்றும் அவரது மனைவி ஸ்டெல்லா மேரி ஆகியோர் கடந்த 16ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சென்னை மகள் வீட்டிற்குச் சென்றனர்.
நேற்று 21ஆம் தேதி வீடு திரும்பியபோது, பின்புறக் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சுமார் 40 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



