கோவை, செப். 15 –
கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம், வழுக்குப்பாறை அடுத்துள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் எழுந்தருளி அருளும் ஆசியும் வழங்கி வரும் அருள்மிகு மகா துர்க்கை அம்மன், அருள்மிகு விநாயகர், அருள்மிகு முருகன் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு விழாவும்,பேரூர் ஆதினம் திருப்பெருந்திரு ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவும், அபிராமி அந்தாதி எனும் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இப்முப்பெரும் விழாவானது அருள்மிகு மகா துர்க்கை தர்மஸ்தல ஆசிரமத்தின் நிறுவனர் தவத்திரு மெய்கண்ட ஆதீனம் அவர்களின் தலைமையில், வேள்வி பூஜை, திருவிளக்கு பூஜை,சிறப்பு அபிஷேக ஆராதனை, உள்ளிட்டவை வேத மந்திரங்களுடன் நடைபெற்றது.
இச்சிறப்பு வாய்ந்த விழாவிற்கு பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார், கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், ஓதிமலை சிவநேச அடிகளார், பச்சாபாளையம் சிவனந்தி அடிகளார் ஆகியோரின் அருள் ஆசியுடன் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினர்களாக இந்து மக்கள் கட்சி தமிழகம் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், மாநில துணைத்தலைவர் மகரிஷி மந்திராச்சலம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தாமோதரன், கலைவாணி கல்வியியல் கல்லூரி, கலைவாணி மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,கலைவாணி போலீஸ் அகாடமி ஆகியவற்றின் நிறுவனத் தலைவர் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டு அருள்மிகு மகா துர்க்கை அம்மன் முதலாம் ஆண்டு விழாவை சிறப்பித்தனர்.
அபிராமி அந்தாதி எனும் முப்பெரும் விழா மலரை கலைவாணி கல்வியியல் கல்லூரி நிறுவனத் தலைவர் வெளியிட கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் இந்து மக்கள் கட்சியை நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேலும் முதலாம் ஆண்டு விழாவில் ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை தரிசித்து ஆசி பெற்று சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



