விழுப்புரம், ஜூலை 28 –
விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில், விழுப்புரம் முதன்மை மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் சார்பில் பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (மதுரை கிளை)/விழுப்புரம் மாவட்ட பொறுப்பு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. மணிமொழி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: உயர்நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் முதன்மை மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் சார்பில் பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்றை தினம் நடைபெற்று வருகிறது. பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவே விசாகா கைட்லைன்ஸ் உருவாக்கப்பட்டது. இதில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது.
தற்பொழுது ஆண்களும், பெண்களும் சமம் என்கிற நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடம் மற்றும் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கான அனைத்து பாதுகாப்பு வழிகாட்டு முறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர்மீது பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்.
மேலும், பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், குற்றம் தொடர்பான புகார் தெரிவிப்பதற்கும், இன்றைய தினம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. எனவே, சட்டக்கல்லூரி மாணவியர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வதோடு பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை, தங்கள் குடும்பத்தினைச் சேர்ந்த மகளிர்கள், நண்பர்கள் மற்றும் பிற மகளிர்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு மாவட்ட நீதிபதி, போக்சோ நீதிமன்றம் தலைவர், பாலின வேறுபாடு களைதல் மற்றும் உள்புகார் குழு வினோதா, பதிவாளர், தமிழ்நாடு தேசிய சட்டப்பணிகள் கழகம், திருச்சி டாக்டர் எஸ்.எம். பாலகிருஷ்ணன், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணலீலா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்



