தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க ஓசூர் மண்டலம் சார்பில் புத்தொழில் நிறுவனங்கள், இளந்தொழில் முனைவோர் மற்றும் தொழில் ஆர்வமுள்ள இளைஞர்களுடன் நடைபெற்ற “Coffee with Collector” என்னும் நிகழ்ச்சியில் புத்தொழில் அட்டைக்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களுக்கு புத்தொழில் அட்டையை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க ஓசூர் மண்டல திட்ட மேலாளர் ஜிஜின் துரை மற்றும் இணை அலுவலர் தீபக் ராஜு மற்றும் புத்தொழில் நிறுவனங்கள், இளந்தொழில் முனைவோர் மற்றும் தொழில் ஆர்வமுள்ள இளைஞர்கள் உள்ளனர்.



