புதுக்கடை, பிப். 5 –
புதுக்கடை அருகே மாராயபுரம் அருகே தமிழ்நாடு காவல்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகையை சேதப்படுத்தியவர்களை தட்டி கேட்ட எஸ்.எஸ்.ஐ-யை பணி செய்ய விடாமல் தடுத்த மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுக்கடை போலீஸ் நிலையத்தில் எஸ் எஸ் ஐ ஆக பணிபுரிபவர் வில்லியம். சம்பவத்தன்று இவர் மாராயபுரம் அருகே ரோந்து பணிக்கு சென்றுள்ளார். அப்பொழுது தமிழ்நாடு காவல்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பதாகையை அப்பகுதியை சேர்ந்த ஹாரிஸ் (28), பிரனேஷ் (42), மகேஷ் (47) ஆகியோர் சேதப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இதை வில்லியம் தட்டி கேட்டுள்ளார். உடனே அவரை அரசு பணி செய்ய விடாமல் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வில்லியம் புதுக்கடை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


