களியக்காவிளை, ஆக. 26 –
களியக்காவிளை அருகே இடைக்கோட்டில் இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் காயம் அடைந்து சிகிட்சை பெற்று வருகின்றனர். நித்திரவிளை சத்தியார் தோட்டம் பகுதியை சார்ந்தவர் சாம்ராஜ் மகன் ஆல்பிரின் (22). நம்பாளி தேரி விளை வீட்டை சார்ந்த சாம்ராஜ் மகன் சைன் (22).
இரண்டு பேரும் பைக்கில் இடைக்கோட்டில் இருந்து கல்லுப்பாலம் சென்ற போது எதிரே வந்த பைக் ஆல்பிரின் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஆல்பிரின், சைன் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். அப்பகுதியினர் இளைஞர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இரண்டு பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பளுகல் போலீசார் பைக்கில் வந்து விபத்தை ஏற்படுத்தியதாக இடைக்கோடு புலியோட்டு கோணம் பகுதியை சார்ந்த மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


