மயிலாடுதுறை, செப்டம்பர் 18 –
மயிலாடுதுறை நகரம் சார்பாக நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் பாரதப் பிரதமர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் நினைவு 5 ரூபாய் தபால் தலை வெளியிடப்பட்டது. அதை நகர உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் மோடி கண்ணன், மாவட்ட துணை தலைவர் SR. வினோத் ஆகியோர் வெளியிட ஸ்ரீ மத்த வாயு சித்த ராமானுஜர் ஜீயர் பெற்றுக் கொண்டார். பின்னர் மயிலாடுதுறை அன்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கியும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை நகர உறுப்பினர் சேர்க்கை அலுவலகத்தில் மரக்கன்றுகள் மற்றும் உணவு பொட்டலங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் நாஞ்சில், ஆர். பாலு, கோவி.சேதுராமன், அய்யா சுரேஷ், பொதுச் செயலாளர் எஸ்.டி.எம். செந்தில், மயில்.ரவி, நகர பொறுப்பாளர்கள் மணிமேகலை, ராமு அருள்ராஜ், முன்னாள் ஓ பி சி அணி பொதுச் செயலாளர் தங்க.சரவணன் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.



