விழுப்புரம், ஜூலை 26 –
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு தண்ணீர் பாட்டில், முந்தரி, பாதம், பேரிச்சம் பழம் அடங்கியவை கொடுத்தனர். ஆனால் விவசாயிகளுக்கு வெறும் சுண்டல் மட்டும் கொடுத்து உள்ளனர்.
இதனால் கோபமடைந்த விவசாயிகள் எழுந்து நின்று மாவட்ட ஆட்சியர் மட்டும் பாதம் சாப்பிடலாம். விவசாயிகள் சுண்டல் மட்டும் தான் சாப்பிட வேண்டுமா என விவசாயிகள் கேள்வி எழுப்பியதால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குடிப்பதற்கு தண்ணீர் கூட தர மறுக்கிறீர்கள். தண்ணீர் கொடுப்பதற்கு கூட நாதி இல்லையா என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவரின் பக்கத்தில் வைத்த பாதாம் மற்றும் முந்தரி அடங்கிய தொகுப்பை எனக்கும் வேண்டாம் என ஒதுக்கினார். விவசாயிகளுக்கும் பாதாம் முந்திரி வைத்தால் மட்டுமே எனக்கும் வைக்க வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். இச்சம்பவத்தினால் விவசாயி குறைதீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



