திங்கள்சந்தை, டிச. 23 –
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய குருந்தன்கோடு ஒன்றியம் குளச்சல் நகர இந்தியா கூட்டணி சார்பில் கண்டன கூட்டம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திங்கள்நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் எப்எம் ராஜரெத்தினம் தலைமை வகித்தார்.
திமுக ஒன்றிய நிர்வாகிகள் பிஎஸ்பி சந்திரா, சுரேந்திரகுமார், நகர நிர்வாகி நாகூர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குருந்தன்கோடு குளச்சல் வட்டார செயலாளர் பா. ராஜூ, மாவட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் புஸ்பதாஸ், திமுக மாநில நிர்வாகி வி. ஜோசப்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சிவானந்தம், பன்னீர்செல்வம், அமிர்தராஜ், மேரிஎஸ்தர், விஜயகுமார், சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் ஆர். சுசீலா, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி சபீர் அலி, காங்கிரஸ் நிர்வாகிகள் தனிஷ், வேணுகோபால், விசிக நிர்வாகிகள் மணி, பாபு, ரவி மற்றும் இந்தியா கூட்டணி அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக குருந்தன்கோடு ஒன்றியம் குளச்சல் நகர இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நாளை (24ம் தேதி) காலை 10 மணிக்கு குருந்தன்கோடு ஜங்ஷனில் போஸ்ட் ஆபீஸ் முன்பு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. திங்கள்நகர் பேரூர் திமுக செயலாளர் சேவியர் ஏசுதாஸ் நன்றி கூறினார். கூட்டத்தில் குருந்தன்கோடு ஒன்றியம் குளச்சல் நகர இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



