பரமக்குடி, ஆக. 28 –
பரமக்குடி மாதவன் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டு பகுதியிலான மாதவன் நகர், ரயில்வே பீட்டர் ரோடு, மருது பாண்டியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. மாதவன் நகர் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் நகர் மன்ற உறுப்பினர் வடமலையான் தலைமையில்
20 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களைக் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது.
பின்னர் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகளும், தீப ஆராதனைகளும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்பகுதி பெண்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, பரமக்குடி நகர ஆய்வாளர் இளஞ்செழியன் உள்பட மாதவன் நகர் மக்கள் நலச் சங்க நிர்வாகிகள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் மன்றத்தினர் மற்றும் மாதவன் நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



