நாகர்கோவில், மே 14 –
நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். ஆனால் தமிழக சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் தேர்தல் நடத்த விதிகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கூட்டத்துக்கு பொறுப்பு மேயர் மேரி பிரின்சி லதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அந்த வகையில் 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்திருந்தன. குடிநீர் பிரச்சினை, சாலை சீரமைப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வந்திருந்தன. அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு (பொ) மேயர் மேரி பிரின்சி லதா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளில் தற்போதைய நிலை குறித்தும், அடுத்ததாக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.



