நாகர்கோவில், ஜூன் 23 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் நேற்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான கப், பைகள், பிளேட்கள், கவர்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நாகர்கோவில் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் மரு.ஆல்பர் மதியரசு தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையானது நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி, ஒழுகினசேரி, மீனாட்சிபுரம், கோட்டார் ஆகிய பகுதிகளில் சுமார் 200 கடைகளில் நடைபெற்றது. மேலும் நாகர்கோவில் புளியடி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விற்பனை குடோனில் சோதனை செய்யப்பட்டது. இந்த குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களான கப், ஸ்ட்ரா, இலை, கவர், கத்தி, பிளேட், பவுல், போன்ற பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த எடை 6250 கிலோ ஆகும். எனவே அந்த குடோனை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது துப்புரவு அலுவலர்கள் ராஜாராம், ராஜா, முருகன் மற்றும் பகவதி பெருமாள், சுகாதார மேற்பார்வையாளர்கள் சுந்தர், குமார், விமல், ஜெயின், விக்னேஷ், ஆண்டனி, அனிஸ் கிப்ட், ஜெரின், அபின், ஜெயன், அனிஸ், ரஜாத், மணிகண்டன், C.சுப்பிரமணியபிள்ளை, பாலவினித், தவசி, S.சுப்பிரமணியபிள்ளை, அழகேசன், சரவணன், சந்திரன், ஜினோ, கென்னடி, லிங்கேஷ், அபினேஷ், அருண், பொன் அஜித், விஷ்ணு மற்றும் தூய்மை பரப்புரைப்புரையாளர்கள் சுனில் குமார், சுனில், சிவா, வினில், கணேசன், வீரவாகு, சிங்காரவேலு மற்றும் ஓட்டுநர்கள் பாலகிருஷ்ணன், ரூபன் ஆகிய 50 பேர் கொண்ட மாநகராட்சியின் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் தடுப்பு குழு உடன் இருந்தனர்.



