ஈரோடு, ஆக. 21 –
ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் 17-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தொழில்நுட்ப கல்லூரிகளின் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநிலை முதலாமாண்டு வகுப்புகளின் துவக்க விழாவினை நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் பானுமதி சண்முகன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பிரபல இதழாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் பேச்சாளர் கோபிநாத் சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் விழாவுக்கு தலைமை தாங்கினார் .
முன்னதாக கல்லூரி முதல்வர் ரகுபதி வரவேற்றார். இவ்விழாவில் நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் எஸ். ஆறுமுகம் மற்றும் நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் ஏ.கே. வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். முடிவில் நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் நந்த கோபால் நன்றி கூறினார்.



