தருமபுரி மாவட்ட நிர்வாகம், பொது நூலகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தக பேராலயம் இணைந்து நடத்தும் 6-ஆவது தருமபுரி புத்தகத் திருவிழாவில் 8-ஆம் நாள் நிகழ்ச்சியாக ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிகள் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், யோகா நிகழ்ச்சிகள் மற்றும் புகை, போதை பொருட்களின் தீமைகளைக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரியின் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.



