நாகர்கோவில், அக். 4 –
குமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு உதவ Police QR ஹெல்ப்லைன் திட்டத்தை எஸ்.பி. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் முதற்கட்டமாக 6 ஆயிரம் ஆட்டோக்களில் QR ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, போலீஸ் எண்கள், காவல் கட்டுப்பாட்டு அறை, சைபர் குற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, தீயணைப்பு, ஆம்புலன்ஸ் உதவி எண்கள் போன்ற சேவைகள் இணைக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக இணைப்பு மற்றும் ஆன்லைன் புகார் பதிவு வசதி சேர்க்கப்பட்டுள்ளதாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக உதவி பெற முடியும். அடுத்த கட்டத்தில் பஸ்கள், கார்களில் QR கோடு ஒட்டப்படும். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திட்டம், குற்றச் செயல்களை குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து எஸ் பி ஸ்டாலின் தெரிவிக்கும் போது: ஆட்டோ மற்றும் பொதுத்துறை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த QR கோர்டை அவசர உதவிக்காக ஸ்கேன் செய்தால் இதில் இடம் பெற்றுள்ள உதவி எண்கள் அவருக்கு காண்பிக்கும் அது மட்டுமல்ல அவர் எந்த மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறாரோ அந்த தொலைபேசி என்னை அவர் பார்த்து உதவி பெற முடியும். இதில் உள்ள உதவி எண்கள்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாட்சப் எண், அனைத்து காவல் நிலையங்களின் தொலைபேசி எண்கள், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு தொலைபேசி எண்,
தீயணைப்புத் துறை, குழந்தை பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, நெடுஞ்சாலைத்துறை, ஆம்புலன்ஸ் உதவி மற்றும் அனைத்து துறை உதவி எண்கள் போன்றவைகளும்.
புகார்கள் பதிவு செய்ய Tamilnadu Police Citizen போர்தல், சைபர் குற்றங்கள் பதிவு செய்வது, செல்போன் மிஸ்ஸிங்(CEIR portal) ஆகியவையும் குமரி மாவட்ட காவல் துறையால் கையாளப்பட்டு வரும் சமூக வலைதள பக்கங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தள பக்கங்கள் ஆகியவற்றை இந்த QR கோடு பயன்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், நாகர்கோவில் போக்குவரத்து ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின், உதவிய ஆய்வாளர் ஸ்மித் ஆல்ட்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.



