ஈரோடு, செப். :
ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. நந்தா கல்வி அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன் மற்றும் சிறப்பு விருந்தினர், மல்டிகோர் வேர் நிறுவனத்தின் முதன்மை மனிதவள அலுவலர் சசிகாந்த் ஜெயராமன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ரகுபதி வரவேற்றார். தொடர்ந்து சசிகாந்த் ஜெயராமன் சிறப்புரையாற்றினார். விழாவில் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளரும் முதலாமாண்டு பொறியியல் துறைத் தலைவருமான திருநீலகண்டன் நன்றி கூறினார்.



