மதுரை, அக். 07 –
மதுரை கோசாகுளம் சிஇஓஏ பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் மற்றும் துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழ்நாடு அணியில் இடம் பிடித்துள்ளது. மேலும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தமிழ்நாடு அணித் தேர்வு சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது. தேசிய அளவிலான இந்த போட்டியில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அந்தத் தேர்வில் இந்தப் பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களை பாராட்டும் வகையில் இக்கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் முனைவர் இராசா கிளைமாக்சு துணைத் தலைவர், சௌந்தரபாண்டி மற்றும் பள்ளியின் முதன்மை முதல்வர் செல்வி. கலா, உடற்கல்வி இயக்குனர் செல்வமுருகன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.



