தென்காசி, செப். 05 –
தென்காசி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியதற்காக தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தும் பெங்களூருக்கு வாரம் இரு முறையும் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், தென்காசி, ராஜபாளையம், மதுரை, பெங்களூர் வழியாக திருநெல்வேலி புருவியா எக்ஸ்பிரஸின் லே ஓவர் ரேக்கைப் பயன்படுத்தி இயக்கலாம் எனவும் தென்காசி மாவட்ட ஐடிஐ வல்லுநர்கள் மாணவர்கள் வணிக சமூகங்களுக்கு பெங்களூர் சென்று வர ஏதுவாக இருக்கும் எனவும் செங்கோட்டை மற்றும் தாம்பரம் இடையே திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், தாம்பரம் பிரதான பாதை வழியாக இயக்கினால் திருநெல்வேலி தென்காசி சாலை பயணத்தை மக்கள் நம்பி இருப்பதை குறைக்க முடியும்.
பயணிகளின் சேவைகளை கருதிக்கொண்டு பயணிகளின் வசதி பிராந்திய மேம்பாடு பிறப்பாதைகளின் எரிச்சலை குறைக்கவும் தென்காசி சந்திப்பு ஒரு முனைய நிலையமாக மேம்படுத்தும் படியும் பயணிகள் காத்திருப்பு அறைகள், அரங்குகள், முன்பதிவு வசதிகளை மேம்படுத்தவும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்கவும் இடைநிலை நிலையங்கள் சங்கரன்கோவில் நடைமேடை இரண்டில் மினி தங்குமிடங்களை கட்டும்படியும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் கோரிக்கை வைத்து தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.



