தென்காசி, ஏப்ரல் 18 –
தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுரண்டை பகுதியில் திமுக வேட்பாளர் கலை கதிரவனை ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரம் செய்தார்.
முன்னதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தென்காசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவனுக்கும் அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர் பேசுகையில்: தென்காசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கலை கதிரவனின் தந்தை முதலமைச்சரிடம் 50 வருடமாக நேரடி தொடர்பில் இருந்து வருவதாகவும் இதனால் இவர் வெற்றி பெற்றால் உங்களுக்கு என்ன தேவை என்பது கேட்டு அனைத்தும் கிடைக்க பெறும் என பேசினார்.
இதனால் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து கலை கதிரவனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார் மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனைகளை விளக்கி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



