திருவெண்ணெய்நல்லூர், ஆக. 11 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மாமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சந்தோஷ்குமார் (36). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் வீட்டில் இருந்து கொண்டு கூலி வேலைக்காக அடிக்கடி வெளியூருக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் கூலி வேலைக்காக திருச்செந்தூருக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். பின்னர் அதே மாதம் 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியூருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
கடந்த 10 நாட்களாக வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் கார்த்திகேயன் (49) என்பவர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மாயமான சந்தோஷ் குமாரை தீவிரமாக தேடி வருகிறார்.



