திருவெண்ணெய்நல்லூர், பிப். 20 –
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த அஸ்வினி (17), பவானி (14). இவர்கள் இருவரும் தாய் தந்தையை இழந்து ஆதரவின்றி அந்த கிராமத்தில் தனிமையில் இருந்து வந்தனர். இச்சம்பவம் குறித்து இந்த இருவரின் புகைப்படங்கள் சமூக வலைகளில் வேகமாக பரவியது.
இதனை அறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரி ஏற்பாட்டில் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் காவல்துறை சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டது. அப்போது இவர்களின் படிப்பு செலவை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரி தெரிவித்தார்.
இச்சம்பவம் மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர் என அழகிரிக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் நேரிலும் தொலைபேசியிலும், சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.



