திருவெண்ணெய்நல்லூர், செப். 9 –
திருவெண்ணெய்நல்லூரில் 1.55 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், நகர செயலாளர் பூக்கடை கணேசன், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்திப் (பொறுப்பு) அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ கலந்து கொண்டு ரூ. 1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருவெண்ணெய்நல்லூர் வடக்கு தெருவில் ரூ.17.70 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் மற்றும் காந்தி நகர் பழைய காலனியில் ரூ.17.70 அங்கன்வாடி கட்டிடம் ஆகிய புதிய கட்டிடங்களை பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் வட்டாட்சியர் செந்தில்குமார், பி.டி.ஓ முல்லை, பாலசுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி, இளநிலை உதவியாளர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் சத்தியமூர்த்தி, மருத்துவர் அருள்ஜோதி, செவிலியர்கள் ரேகா, சுபாஷினி, நிவேதா, கவிதா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



