திருப்பூர், செப்டம்பர் 24 –
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் எம்.பி. அமித் தலைமையில் மைய அலுவலக வளாகத்தில் தூய்மையே சேவை-2025 திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் மூலம் மாநகராட்சி பணிகளுக்காக கழிவுநீர் அகற்றும் புதிய இரண்டு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் துணை மேயர் ரா.பாலசுப்ரமணியம், துணை ஆணையாளர்கள் திருமதி ரா. மகேஸ்வரி, சுந்தரராஜன், 3வது மண்டல தலைவர் சி. கோவிந்தசாமி, சுகாதாரக் குழு தலைவர் மற்றும் 57 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி நே. கவிதா, என்எஸ்கேஎப்டிசி யின் நவ ஜீவன் ஆர்கனைசேஷன் தமிழ்நாடு மாநில இணை இயக்குனர் ஸ்ரீ ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.



