வேலம்பாளையம், ஆக. 18 –
திருப்பூர் காந்திநகர் ரோட்டரி சங்கம் திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி சங்கம் ரேவதி மெடிக்கல் சென்டர் அறக்கட்டளை இணைந்து திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டு சோளி பாளையம் பாட்டையப்பன் நகர் பகுதியில் இதயம் காப்போம் பேருந்து திட்டத்தின் மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமில் இருதய நோயாளிகள், சர்க்கரை ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நெஞ்சு வலி,இடது தோள்பட்டை வலி, உடல் பருமன் உள்ளவர்கள், நடந்தால் மூச்சு விட சிரமப்படுபவர்கள், ஏற்கனவே ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சைகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்கள்,
உடல் பருமன் உள்ளவர்கள் உள்ளிட்டோர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முகாமினை சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த Rtn. ஆனந்த ராம் துவக்கி வைத்தார்.
காந்திநகர் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் Rtn ராஜகோபால், ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன் தலைவர் Rtn.பூபதி, Rtn சண்முகசுந்தரம் செயலாளர், Rtn வேலுச்சாமி பொருளாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் Rtn வடுகநாதன், Rtn ஈஸ்வரமூர்த்தி, Rtn அப்துல்கரீம், 25-வது மாமன்ற உறுப்பினர் Rtn தங்கராஜ், கிளைச்செயலாளர் நடராஜ், சன் முத்துக்குமார், மந்திராசலம் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து பயன்பெற்றனர்.



