திருப்பூர், செப்டம்பர் 5 –
திருப்பூர் மாநகராட்சி 20-வது வார்டில் உள்ள ராமநாதபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் புரட்சி புயல்
வைகோ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கோவில் முன்புறம் உயர் மட்ட நிழல் கூரை அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது.
விழாவினை துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர் தம்பி ஆர். கோவிந்தராஜ், செயற்பொறியாளர் ஹரி, 20-வது வார்டு மாமன்ற உறுப்பினர் குமார், மதிமுக மாவட்ட செயலாளர் நாகராஜ், இளம் பொறியாளர் சுஜாத் அலி, காங்கிரஸ் அரிமா வெங்கடேஸ்வரன், திமுக தலைமைக் கழக பேச்சாளர் ரஜினி செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் கோவில் கமிட்டி நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



