திருப்பூர், ஆக. 03 –
திருப்பூர் தனியார் திருமண மண்டபத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் சமுதாய மக்களின் நலனுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் அறக்கட்டளையினர் ஆண்டுதோறும் சாதனையாளர் விருது வழங்கும் விழாவை நடத்தி வருகின்றனர் அதன்படி திருப்பூரில் நடைபெற்ற மாநில கல்வி சாதனையாளர் விருது வழங்கும் விழாவில்
கல்வி, விளையாட்டு, அறிவியல் கலை சமூக சேவை தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் விதமாக சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் 100 இடங்களையும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 47 இடங்களையும் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கும், மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வில் முதல் ஐந்து இடங்களையும், பொறியியல் படிப்பிற்கான ஜேஇ மெயின் தேர்வில் முதல் ஐந்து இடங்களையும் பெற்ற மாணவர்களையும் பாராட்டி பரிசளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதேபோன்று அரசு பள்ளியில் பயின்று பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவி மாணவிகளுக்கும் என 375 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகையுடன் சான்றிதழ்கள் வழங்கி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுடன் மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் அர்ஜூன் சூரஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்: வருடம் தோறும் இது போன்று மாநில கல்வி சாதனையாளர் விருதுகள் ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாநில கல்வி சாதனையாளர் விருதுகள் கடந்த வருடம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் அதிக அளவில் முதலிடம் பிடித்ததால் திருப்பூரில் இந்த கல்வி சாதனையாளர் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் விளையாட்டு கல்வி அறிவியல் என பல துறைகளில் முத்திரை பதித்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



