திருப்பூர், செப்டம்பர் 17 –
திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டு 15. வேலம்பாளையம் மண்டலம் ஒன்று பகுதியில் சோளி பாளையம் பட்டையப்பன் நகர் பகுதியில் அதிக பனியன் தொழிலாளர்கள் வசித்து வரும் பகுதி. இந்த பகுதியில் சில வருடங்களாக பொதுமக்கள் செல்லக்கூடிய முக்கிய வழித்தடத்தில் புதிதாக ரோடு போடும் பணியினை அதிமுக தங்கராஜ் முயற்சியில் ஒருங்கிணைப்பு குழு கிளைச் செயலாளர் நடராஜ், சன் முத்துக்குமார், ஜெகநாதன், மந்திரசலம், மோகன், சேகர், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்ட நாட்களாக வழியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. மாநகராட்சிக்கு பலமுறை மனு அளித்து பயனில்லாமல் இருந்தது. தகவலை அறிந்த மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் ஆய்வுகளை மேற்கொண்டு பெரும் முயற்சியினால் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியினை துவங்க உள்ளனர். அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.



