திருச்சி, ஜூன் 16 –
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, நில மோசடி புகார் என மொத்தம் 593 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து மனு அளித்தனர்.



