தென்தாமரைகுளம், ஜூன் 01 –
களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி சமூக சேவை சங்கத்தின் வழிகாட்டுதலோடு குமரி கடலோசை மக்கள் இயத்தின் முயற்சியால் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சியானது ஹெலன் நகர், புனித சவேரியார் சமூக நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் குமரி கடலோசை மக்கள் இயக்கத்தின் இயக்குனர் ஆல்பின் ராபி தலைமை தாங்க, கோணம் அரசு பொறியியல் கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் வின்சென்ட் ஜெரின் மாணவர்களையும் அவரது பெற்றோர்களையும் நெறிப்படுத்தினார். மாணவர்கள் எப்படி மேல்படிப்பிற்கான துறைகளை தேர்வு செய்ய வேண்டும், எந்த கல்லூரிகளை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும், வாழ்வில் வெற்றி இலக்கை நோக்கி எப்படி பயணிக்க வேண்டும், என்பது போன்ற நலமான கருத்துக்களை பகிர்ந்தார்.
மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக அமைந்தது. இதில் ஏராளமான மாணவர்களும் பெற்றோரும் கலந்து கொண்டார்கள். குறிப்பாக, கீழ்குளம், இணையம், மிடாலம், ராமன் துறை, மற்றும் முள்ளூர்துறை ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு முதுநிலை சமூக பணி துறை மாணவர் ஜாண் போஸ்கோ. ஜெ ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.



