திருப்பூர், ஜூலை 17 –
சொந்த இடத்தில் கம்பி வேலி அமைக்கும்பொழுது உடன்பிறந்த அண்ணன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு வழங்கப்பட்டது.
15 வேலம்பாளையம் 12வது திமுக வார்டு செயலாளராக செந்தில்குமார் உள்ளார். எங்களுக்கு பூர்வீக பாத்தியப்பட்ட ஒரு ஏக்கர் 97 சென்ட் அளவுள்ள இடத்தில் எனக்கும் எனது அண்ணன் அவர்களுக்கும் பாத்தியப்பட்ட பூமி உள்ளது. இந்த இடத்தில் எனக்கு சொந்தமான டாக்குமெண்ட் அளவுள்ள 98 சென்ட் எனக்கு பாத்தியப்பட்டதாகும் இந்நிலையில் எனது அண்ணன் எனக்கு சொந்தமான பாத்தியப் பட்ட பூமியில் கம்பி வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவருடன் அவரது மனைவியும் என்னை தகாத வார்த்தையாலும் உள்ளே வரக்கூடாது எனவும் மிரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் எனக்கு பாத்தியப்பட்ட பூமியில் உள்ளே வர அனுமதிக்காமலும் எனக்கு சொந்தமான இடத்தில் கம்பி வேலி அமைப்பதற்கு அனுமதிக்குமாறு காவல்துறை நடவடிக்கை எடுத்து விசாரித்து எனக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தார்.



