தருமபுரி, மே 15 –
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் 2005ல் உருவாக்கப்பட்டது. இதனால் கிராமப்புறத்தில் பணப்புழக்கம் ஏற்பட்டு, பெண்களுக்கு வாழும் கிராமத்திலேயே 100 நாட்கள் வேலை கிடைத்ததால் குடி பெயர்ச்சி தடுக்கப்பட்டு, கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர்களின் இடைநிறுத்தம் குறைந்தது.
இப்படி இருக்கும் சட்டத்தின் மீது அவதூறு பொய் பரபரப்பு செய்து நிதி குறைத்து நீர்த்து போக செய்து இறுதியாக கடந்த 2025 டிசம்பர் 21ம் தேதி புதிய சட்டமான VB G RAMG (G) என்று வளர்ந்த பாரத கிராமபுற வேலை உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்) என்று கொண்டு வந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசு இதனால் 15 கோடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
அதனால் இந்த புதிய சட்டத்தினை ரத்து செய்து பழைய சட்டமான (MGNREGA) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தினை தொடர்ந்து அமுலாக்க வேண்டியும், ஆண்டுக்கு 200 நாள் வேலையும் தின சம்பளம் ரூ.700 வழங்க வேண்டியும், அரசு பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தின சம்பளம் உயர்த்த வேண்டியும், பணிக்கு வரும் இடத்தில் மூன்று முறை கண்விழி, முகம் ஆகியவைகளை இணைய வழியில் படம் எடுத்தால் தான் வேலை என்பதனை ரத்து செய்ய வேண்டியும், கிராம சபைக்குதான் என்ன வேலை, எங்கு வேலை என்பதனை முடி செய்ய அதிகாரம் வழங்க வேண்டிய கோரிக்கைகளை வலியுறுத்து அகில இந்திய அளவிலான வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.
இதற்கு சங்க ஒருங்கிணைப்பாளரும் இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜே பிரதாபன் தலைமை தாங்கி வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார். சங்க ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பைசு அள்ளி ஊராட்சி ஜி. மாதையன், ரத்தினவேல், இலளிகம் ஊராட்சி ஈ.அலமேலு, எல்.சி.கிருஷ்ணன், ஜெ.காளியம்மாள் அதகப்பாடி ஊராட்சி ஜி.பச்சா கவுண்டர், பி.பச்சியப்ப சாமியார், கொண்ட கர அள்ளி ஊராட்சி வத்தல் மலை ஜி.ராஜகோபால், கே.லட்சுமணன், கே.ராஜமாணிக்கம், சுகங்கர அள்ளி ஊராட்சி பால் சிலம்பு, தீ.தங்கராஜ், ஆ.அழகுதுரை, மாதேமங்கலம் ஊராட்சி வெ.பை.மாதையன், என்.குமார், தின்னஅள்ளி ஊராட்சி ஆர்.மல்லையன், ஏலகிரி ஊராட்சி வி.செல்வம், எம்.ராஜாமணி, ஆர்.ரங்கநாதன், கோண நாயக்கன அள்ளி ஊராட்சி கே.சி.மணி, தண்டுகாரனஅள்ளி ஊராட்சி முத்து, தடங்கம் ஊராட்சி பி.மாரியப்பன் ஆகியோர் தலைமையில் அந்தந்த கிராம ஊராட்சியில் அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தருமபுரியில் நடைபெற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இறுதி மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.பிரதாபன் வழங்கினார்.



