தருமபுரி, செப்டம்பர் 17 –
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள பெரியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆ. மணி எம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, தர்மசெல்வன், மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, நகரச் செயலாளர் நாட்டான் மாது, நகர துணை செயலாளர் முல்லை வேந்தன், ஒன்றிய செயலாளர்கள் பெரியண்ணன், காவேரி, மாதேஸ்வரன், ரவி, கௌதம், உதயசூரியன், இளைஞர் அணி அசோகன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ரஹீம் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



