தருமபுரி, ஆகஸ்ட் 18 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெருக்கூத்து பயிற்சி சங்கத்தினர் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் கலைஞர்கள் நடத்தப்படும் கூட்டமைப்பு கலைவிழா சங்க மாநாடு நடத்த உள்ளதால் விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: நாட்டுப்புற கலைஞர்கள் 2,000 பேர் ஒன்று சேர்ந்து கலை விழா சங்கமம் மாநாடு தருமபுரியில் நடத்த உள்ளோம். தாங்கள் கலந்து கொண்டு கலைக்குழுவிற்கு சான்று, கேடயம், பொன்னாடை வழங்கி சிறப்பிக்க வேண்டும். குறிப்பாக ஐந்து குழுக்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி சிறப்பிக்க வேண்டும்.
கண்ணன் தெருக்கூத்து நாடக சபா திருமல்வாடி, எம்ஜிஆர் கலைக்குழு வாத்தியார் சி. புதூர், ஸ்ரீ விநாயகா கோலாட்ட கலைக்குழு பாளையம், காமராஜ் நகர், எம் அப்பாதுரை நாதஸ்வர தவில் கலைக்குழு மாம்பாடி, இ முருகன் தெருக்கூத்து நாடக சபா ஆட்டுக்காரன்பட்டி ஆகிய கலைக்குழுவுக்கு மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியின் கீழ் எங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி தொன்மை வாய்ந்த கலை அழியாமல் ஒகேனக்கலில் பாதுகாக்கவும், கலைஞர்கள் வாழவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதில் 15 பேர் கலைஞர்கள் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.



