தருமபுரி, ஆகஸ்டு 12 –
தருமபுரி எஸ்.வி. ரோடு கருப்பையின் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி சோர்ணமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் 36-ம் ஆண்டு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு வள்ளி, தெய்வானை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கணபதி பூஜை, மகா பூர்ணாஹுதி அம்மனுக்கு அபிஷேகம், பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதில் பெண்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வளையல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சக்தி அழைப்பு, அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை 108 பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.



