தருமபுரி, ஆக. 4 –
தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, பட்டு வளர்ச்சி துறை இயக்குனர் சதீஷ், மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகளின் முன்னேற்றம் விவசாயிகளுக்கான மின்னணு பட்டுக்கூடு பரிவர்த்தனை (e-Auction) வசதிகள் மற்றும் அங்காடியின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின்போது சேலம் துணை இயக்குனர் பொன்மாரி, தருமபுரி மண்டல இணை இயக்குனர் இளையராஜா, துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் ஜார்ஜ் மற்றும் துறையின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



