தருமபுரி, செப்டம்பர் 25 –
தருமபுரியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சதீஷ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் நாட்டான் மாது, நகர நிர்வாகிகள் முல்லை வேந்தன், ரவி, கனகராஜ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் வெல்டிங் ராஜா, வனத்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



