தருமபுரி, செப்டம்பர் 15 –
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் ஆ. மணி எம்பி தலைமையில் ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக வந்தனர். இதைத் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் நகரச் செயலாளர் நாட்டான் மாது, நகர மன்ற தலைவர் லட்சுமி, நகர துணைச் செயலாளர் முல்லவேந்தன், ஒன்றிய செயலாளர் காவேரி, பெரியண்ணன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி நகர திமுக சார்பில் பூத்து வாரியாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 9, 10, 11-வது வார்டுகளுக்கு உட்பட்ட குமாரசாமி பேட்டையில் உள்ள பூத்தில் அண்ணா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இதைத்தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஆ. மணி, மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகா தேவி, நகர மன்ற தலைவர் லட்சுமி, நகரச் செயலாளர் நாட்டான் மாது, நகரத் துணைச் செயலாளர் முல்லைவேந்தன், நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், பாண்டியன், ஜெகன், ஒன்பதாவது வார்டு செயலாளர் கனகராஜ் ரவி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.



