ஈரோடு, ஜூலை 10 –
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலம் முழுவதும் பல்வேறு மக்கள் நலப் பணிகள் தற்போது அதிரடியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகராட்சி 43-வது வார்டு, தமிழக வெற்றிக் கழக மாமன்ற உறுப்பினர் சபுராமா ஜாபர் சாதிக் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக, மரப்பாலம் ஜீவானந்தம் சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நடைபெற்ற இந்தச் சாலைப் பணியினை, மாமன்ற உறுப்பினரின் கணவரும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி, தார் சாலை போடும் பணியினை தரம் குறையாமல் விரைந்து முடிக்குமாறு அங்கு பணியில் இருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டு வலியுறுத்தினார்.



