திருப்பூர், ஜூன் 25 –
மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாமில் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு வழங்கினர். திருப்பூர் மாவட்டம் அமராவதி பிரதான கால்வாய் மைல் எண் 22.06.215 கிளை வாய்க்கால் பசன கடை மடை மடத்துக்குளம் வட்டம், துங்காவி கிராமம் விவசாயிகள் எங்களது கிளை வாய்காளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்து தர வேண்டும்.
கிளை வாய்க்கால் தமிழக அரசால் 1984 ஆம் ஆண்டு வெட்டப்பட்டு பசன பயன்பாட்டிற்கு வந்தது. மேற்படி கிளை வாய்க்காலுக்கான இழப்பீட்டு தொகை 27.1.2015 அன்று தமிழகஅரசால் ஆணையிடப்பட்டது. அதன் பின்பு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருவாய் துறையினர் மூலம் 7.10.2023 அன்று பொதுப்பணித்துறையினருக்கு நிலம் ஒப்படைப்பு செய்யப்பட்டது.
அன்று முதல் இன்று வரையிலும் இந்த கிளை வாய்க்காலுக்கு உண்டான பாதையை அமைத்துத் தர பலமுறை மனுக்கள் கொடுத்தும் நேரில் கோரிக்கை வைத்தும்
பொதுப்பணித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதன் காரணமாக கடைமடை பசனம் பெற இந்த கிளை வாய்க்கால்கள் வெட்டப்பட்டது முதல் இன்று வரை பணிகள் நடைபெறவில்லை. இது பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது 20.06.2025 முதல் 5.7.2025 வரை அமராவதி பிரதான கால்வாயில் உபரி நீர் 15 நாட்களுக்கு வந்துள்ளது.
இந்த கிளை வாய்க்காலில் உள்ள நீர் நிலை தண்ணீர் திருடும் விவசாயிகளை ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு ஆயக்கட்டு பதிவேட்டின் படி அனைத்து விவசாய பூமிகளுக்கும் கடைமடை பசனம் நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டு உதவுமாறு கிளை வாய்க்கால் பசனம் கடை மடை துங்காவி கிராமம் விவசாயிகள் மனு அளித்தனர்.