தஞ்சாவூர், ஜூலை 27 –
தஞ்சாவூர் அருகே கள்ளப் பெரம்பூர் ஏரியில் 3 கி.மீநீளத்துக்கு புதிதாக கரை அமைக்கப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட கலெக்டர் ரேவதி.
தஞ்சாவூர் அருகே உள்ள கள்ளப் பெரம்பூர் பெரிய ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு அவர் தெரிவித்ததாவது: நீர்வளத்துறைகட்டுப்பாட் டில் உள்ள இந்த ஏரி ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இந்த ஏரி ஏறத்தாழ 8 கி.மீ நீள கரையுடன்640 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் ராயந்தூர், தென்னங்குடி, சக்கர சாமந்தம் ,சீராளுர், கள்ளப் பெரம்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 2662 ஏக்கர்விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை உறுதி செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள் பங்களிப்புடன் கள்ளப்பெரம்பூர் ஏரி சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் முதல் கட்டமாக 3 கி.மீ நீலத்திற்கு புதிதாக கரைய அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கரை அமைக்கும் பணி முடிவுற்றவுடன், ஏறி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் நீர் சேமிப்பு வைக்கப்படும். இதன் மூலம் இப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தேவையான நீர் ஆதாரத்தை உறுதி செய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உறுதுணையாக அமையும் என்றார் கலெக்டர்.
அப்போது தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் சரவணன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் ரமா பிரபா, தஞ்சாவூர் வட்டாட்சியர் மூர்த்தி, தன்னார்வத் தொண்டு நிறுவன செயலர் நிர்மல் குமார் உள்ளிட்டோருடன் இருந்தனர்.



