தஞ்சாவூர் மே.31.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக விவசாயிகள், நடுத்தர சாதாரண மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிராக மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகை கடன் நிபந்தனைகளை உடன் கைவிட வலியுறுத்தி திமுக விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் எம் பி யும் திமுக விவசாய அணி செயலாளருமான ஏ கே எஸ் விஜயன் தலைமை வகித்து பேசுகையில், மத்திய அரசின் கைப்பாவையாக ரிசர்வ் வங்கி செயல்பட்டு நகை கடன் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதனால் ஏழை விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ள னர். ரிசர்வ் வங்கியில் இந்த நகை கடன் கொள்கையை உடன் கைவிட வேண்டும். நாட்டின் விவசாயிகளை வஞ்சிக்க கூடாது. ரிசர்வ் வங்கி நிபந்தனைகளை திரும்பப்பெறும் வரை போராடுவோம் என்றார்.
முன்னாள் எம்.பி. பழனிமாணிக்கம் முன்னிலை வகித்து பேசினார். மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, எம்.எல்.ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி .கே,ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயரும், மாநகர செயலாளருமான சண்.ராமநாதன், திராவிடர் கழக ஜெயக்குமார், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சிபிஎம் சாமி.நடராஜன், சிபிஐ மாசிலாமணி, சிபிஎம் மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் செந்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜெய்னுலாபிதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள நகை கடன் புதிய விதிமுறைகளை உடன் ரத்து செய்ய வேண்டும், இந்த புதிய விதிமுறையால் ஏழை விவசாயி கள், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே ரிசர்வ் வங்கி நிபந்தனைகளை திரும்பப் பெறும் வரை போராடுவோம் என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.



