தஞ்சாவூர், மார்ச் 21 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளையும், செலவுகளையும், கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம் தொகுதிக்கான புது பார்வையாளர் அருண்குமார், செலவின பார்வையாளர் சோமண்ணா, பாபநாசம், திருவையாறு தொகுதிக்கான பொது பார்வையாளர் கேஷ்வேந்திர குமார், செலவின பார்வையாளர் சஞ்சீவ் குமார், தஞ்சாவூர், ஒரத்த நாடு தொகுதிகளுக்கான பொது பார்வையாளர் திவேஷ் செஹரா, செலவின பார்வையாளர் அஸ்வினி குமார் சிங் கால், பட்டுக் கோட்டை, பேராவூரணி தொகுதிக்கு பொது பார்வையாளர் சர்ஜித் கவுர், செலவின பார்வையாளர் ஹேமங் ஃபூகன் 8 தொகுதிகளுக்கான தேர்தல் காவல் மேற்பார்வையாளர் குமார் சவுரப் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள், பறக்கும்படையினர், நிலையானகண்காணிப்புக்குழு அலுவலர்கள்மற்றும் காவல்துறையினருடன் கலந்தாய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட திட்ட இயக்குனர் பாலகணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



