தருமபுரி, செப்டம்பர் 04 –
தருமபுரி மாவட்டம் செட்டிகரை ஊராட்சி மாதுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 21.08.2025 அன்று மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜையுடன் கொடியேற்றத்துடன் விழாவானது தொடங்கியது. நேற்று 3/9/2025 காலை 10 மணி அளவில் முளைப்பாரி, தீர்த்த குடம், புதிய சிலை விக்கிரகங்கள் ஊர்வலம் நடைபெற்றது. மேலும் மாலை 6 மணி அளவில் முதல் கால பூஜை நடைபெற்று ஸ்ரீ அங்காளம்மன் மூல மந்திரம் ஹோமம், துர்கா சுத்தம், ஸ்ரீ சுத்தம் ஹோமம், உபசார பூஜை ஆகிய பூஜைகள் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று 4/9/2025 காலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் இரண்டாம் கால பூஜை செய்யப்பட்டு 9 மணி அளவில் கோபுர கலசத்திற்கு பூஜை செய்து ஸ்ரீ அங்காளம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு பூக்கள் போடப்பட்டது. ஸ்ரீ அங்காளம்மன் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு சாமியே தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



