தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டாவது வார்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கிளை கழக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள். முன்னாள் கிளைச் செயலாளர் குணசேகரன் தலைமையில் பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு,பொது அறிவு புத்தகம், பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு, எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு ஆகிய புத்தகங்களை வழங்கினார்கள். இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.



