களியக்காவிளை, ஆக. 22 –
செங்கவிளை மகா கணபதி கோயிலில் விநாயக சதுர்த்தி விழா மற்றும் கும்பாபிஷேக விழா ஆகஸ்ட் 24-ம் தேதி துவங்கி 28-ம் தேதி நிறைவடைகிறது. விழா நாட்களில் தினமும் காலை அஷ்ட திரவிய மகாகணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. முதல் நாள் விழாவில் காலை திருக் கொடியேற்றுதல், பஜனை, கலாச்சார மாநாடு, சிறப்பு அலங்கார தீப வழிபாடு, இன்னிசை நடக்கிறது.
இரண்டாம் நாள் விழாவில் புராண பாராயணம் அம்மன் பூஜை, ஊர்வலம்,இரவு சிறப்பு பூஜை, திருவாதிரை, நடன மாலை நடக்கிறது. மூன்றாம் நாள் விழாவில் வழக்கமான பூஜைகள் பாலாபிஷேகம் நாகர் பூஜை, பகவதி சேவை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நான்காம் நாள் விழாவில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வழக்கமான பூஜைகள், மிருத்யுஞ்சய ஹோமம், இலவச மருத்துவ முகாம், நவாபிஷேகம், கலசாபிஷேகம் நடக்கிறது. ஐந்தாம் நாள் விழாவில் காலை வழக்கமான பூஜைகள், பாலாபிஷேகம் சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை, திருக்கொடி போற்றுதலுடன் இவ்வருட திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.



