சுசீந்திரம், ஜூலை 29 –
சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று திடீரென கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அதற்கு முன்பு பேரூராட்சி நடைபாதையில் சிறிது நேரம் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சுசீந்திரம் பேரூராட்சி கவுன்சிலர் ஒருவரிடம் கேட்டபோது கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பேரூராட்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றும் கணினி ஆப்ரேட்டர் ஒருவருக்கு மாதந்தோறும் சுசீந்திரம் பேரூராட்சி நிதியில் இருந்து சம்பளம் கொடுத்து வருவதாகவும் அதனை கண்டித்து கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.



